பத்தாம் வகுப்பு
தமிழ்
இயல் - 1. செய்யுள் பாடல் வினா
செய்யுளைப் படித்து கீழேயுள்ள பல்நோக்கு வினாக்களுக்கு விடையளிக்க.
அன்னை மொழியே ! அழகார்ந்த செந்தமிழே !
முன்னைக்கும் முன்னை முகிழ்ந்த நறுங்கனியே !
கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிலையில்
மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே !
தென்னவன் மகளே ! திருக்குறளின் மாண்புகழே !
இன்னறும் பாப்பத்தே ! எண்தொகையே ! நற்கணக்கே !
மன்னுஞ் சிலம்பே ! மணிமே கலைவடிவே !
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே !
வினாக்கள்:
1. இப்பாடல் இடம் பெற்ற நூல் ____________.
அ. அன்னை மொழியே. ஆ. பெருமாள் திருமொழி.
இ. முல்லைப்பாட்டு. ஈ. நீதி வெண்பா.
2. இப்பாடல் இடம்பெற்ற தொகுதி ____________.
அ. அன்னை மொழியே. ஆ. செந்தமிழ். இ. கனிச்சாறு. ஈ. மாண்புகழ்.
3. முன்னை என்பதன் பொருள் ______________.
அ. புதுமை. ஆ. பழமை. இ. பண்ணை. ஈ. திண்ணை.
4. இப்பாடலின் ஆசிரியர் ____________.
அ. பாரதியார். ஆ. ந.பிச்சமூர்த்தி.
இ. பெருஞ்சித்திரனார். ஈ. க. சச்சிதானந்தன்.
5. முகிழ்ந்த என்பதன் பொருள் ____________.
அ. முடிந்த. ஆ. மூழ்கிய. இ. தோன்றிய. ஈ. தோன்றாத.
6. முன்னும் என்பதன் பொருள் ____________.
அ. மயக்கம். ஆ. பொங்கியெழும். இ. முன்னை. ஈ. முதன்மையான.
7. தென்னவன்.
அ. சேரன். ஆ. சோழன். இ. பாண்டியன். ஈ. பல்லவன்.
8. மாண்பு.
அ. பெருமை. ஆ. மறுமை. இ. சிறுமை. ஈ. தனிமை.
9. மண்ணுலகம். ( பிரித்து எழுதுக )
அ. மண் + ணுலகம். ஆ. மண் + உலகம். இ. மண்ணு + லகம். ஈ. ம + உலகம்.
10. இச்செய்யுள் இடம் பெற்ற பாவகை.
அ. வெண்பா. ஆ. ஆசிரியப்பா. இ. வஞ்சிப்பா. ஈ. கலிப்பா.
11. இப்பாடலில் குறிப்பிடப்படும் காப்பியங்கள்.
அ. எட்டுத்தொகை பத்துப்பாட்டு. ஆ. சிலப்பதிகாரம் குண்டலகேசி.
இ. சிலப்பதிகாரம் மணிமேகலை. ஈ. சிலப்பதிகாரம் வளையாபதி.
12. இப்பாடலின் ஆசிரியரின் இயற்பெயர் ____________.
அ. மாங்குடி மருதனார். ஆ. க.சச்சிதானந்தன்.
இ. துரை. மாணிக்கம். ஈ. பெருஞ்சித்திரனார்.
13. 'நற்கணக்கே' என்று குறிப்பிடப்படுவது எது ?
அ.சிலப்பதிகாரம் மணிமேகலை ஆ. பதினெண்கீழ்க்கணக்கு.
இ. பதினெண்மேற்கணக்கு. ஈ. திருக்குறள்.
14. செந்தமிழ். ( பிரித்து எழுதுக )
அ. செந் + தமிழ். ஆ. செ +தமிழ். இ. செம்மை+ தமிழ். ஈ. செம் + தமிழ்.
15. கடல்.
அ. ஆழி. ஆ. கேண்மை. இ. பார். ஈ. விசும்பு.
No comments:
Post a Comment