தமிழ்
பத்தாம் வகுப்பு ( 2022 - 2023 )
துணைப்பாடம்
பாய்ச்சல்
குறிப்புச் சட்டகம்:
முன்னுரை
தெருமுனை திறமைகள்.
பக்க வாத்தியம்.
அனுமார் ஆட்டம்.
அனுமார் அருகில் அழகு வரல்.
ஆற்றங்கரை ஓரம்.
முடிவுரை .
முன்னுரை:
புதின எழுத்துகளால் தனது புகழைத் தமிழ் உலகில் முத்திரைப் பதித்து சாகித்திய
அகாதெமி விருதுபெற்ற சா. கந்தசாமியின் ‘பாய்ச்சல்’ கதையில் மனித இதயத்தின்
ஆழங்களுக்கு ஒளியை அனுப்புவதே கலைஞனின் நோக்கம் பற்றி இக்கட்டுரையில்
காண்போம்.
தெருமுனை திறமைகள் :
தெருமுனையில் தினந்தோறும் எத்தனையோ கலைகள் நடைபெற்றுக்
கொண்டிருக்கின்றன. நடுத்தர மக்களை நம்பி தங்கள் வாழ்வாதாரத்தைப் பெருக்கிக் கொள்ள
அனுமார் வேடமிட்டு ஒருவன் அனைவரையும் மகிழ்விக்கிறான்.
குரங்குபோல ஓடிவந்தான். இரண்டு கால்களையும் மாறிமாறி தலையில் அடித்து
வேகமாகக் கைகளை வீசி நடந்தான். கொஞ்சம் தூரம் சென்று கடையில் இருந்த
வாழைத்தாரிலிருந்து பழங்களைப் பறித்து அருகில் இருந்தவர்களுக்கெல்லாம் கொடுத்து
தானும் ஒரு பழம் சாப்பிட்டான்.
பக்க வாத்தியம்:
அனுமார் வேடமிட்டு ஒருவன் சதங்கை மேளம், தாளம், நாதசுரம் ஒலிக்க அதற்கு
ஏற்றாற்போல் குறுக்கும் நெடுக்குமாகப் பாய்ந்தோடினான். நீண்ட வாலை மேலே சுழற்றி
தரையில் அடித்து புழுதியைக் கிளப்பினான்.
அனுமார் ஆட்டம்:
இசைக்கேற்ப ஆடியவன் தன்னையே மறந்து கைகளை மார்போடு அணைத்துக்
கொண்டான். தான் உண்மை அனுமாராக மாறியதை எண்ணி ‘கீச் கீச்’ என்று கத்திக்கொண்டே
பந்தக்காலைப் பற்றிக்கொண்டு மேலே ஏறினான். திடீரென மேளமும் நாதசுரமும் ஒலிக்கத்
தொடங்கியபோது கூட்டம் திகைத்தது. கண்மூடி கண் திறப்பதற்குள் அனுமார் கீழே குதித்தார்.
வாலில் பெரிய தீப்பந்தம் கண்டு கூட்டம் பின்வாங்கியது.
அனுமார் கால்களைத் தரையில் அடித்து உடம்பைக் குலுக்கினார். நெருப்பு
அலைபாய்ந்தது. கைகளைத் தட்டிக் குட்டிக்கரணம் போட்டான். கூட்டம் பாய்ந்தோடியது.
அனுமார் தன் கம்பீரமான தோற்றத்தோடு நின்று சிரித்தார். கூட்டமும் அமைதியானது.
அனுமார் அருகில் அழகு வரல்:
அனுமாரால் வாலை வெகு நேரமாகச் சுமக்க முடியாததால் அழகு கையில்
கொடுத்துவிட்டு நடக்க ஆரம்பித்தான். வாலைத் தூக்கிக் கொண்டு அழகாலும் ஓட
முடியவில்லை. வெட்கத்தோடு வாலைப் போட்டுவிட்டு வெளியேறினான்.
காரில் வந்தவர் ஹாரன் அடிக்க ஒருவன் காரை மறித்தான். அனுமார் எரிச்சலுற்று
அவனை வாலால் பின்னுக்கு இழுத்தான். கார் முன்னே வந்து அனுமாருக்குப் பணம் கொடுக்க
அனுமார் வாங்காமல் மேளக்காரனைப் பார்க்க மேளக்காரன் வாங்கி மடியில் வைத்துக்
கொண்டான்.
ஆற்றங்கரை ஓரம்:
ஆட்டமில்லாமல் அனுமார் நடக்க ஆரம்பித்தபோது கூட்டம் குறைய ஆரம்பித்தது.
மேளக்காரன் தவுலைக் கீழே இறக்கி வைத்தான். ஆட்டம் முடிந்தது என்று தீர்மானம் செய்து
கூட்டம் முற்றிலும் கலைந்தது. அனுமார் வாயால் மூச்சுவிட்டு ஆலமரத்தில் சாய்ந்துகொண்டார்.
மேளக்காரன் பணத்தைப் பங்கு போட்டுப் பிரித்துக் கொடுத்தான். அனுமார் அதை
வாங்கிக் கொண்டு ஆற்றங்கரையோரமுள்ள கோயில் தூணில் சாய்ந்துகொண்டு அனுமார்
உட்கார்ந்தார்.
முடிவுரை:
இக்கதையில் கூட்டத்தினரை மகிழ்விக்க வந்த அனுமாரின் ஆட்டத்தைக் கண்டு
மயங்கி அனுமாரைப் போலத் தானும் ஆடினான் அழகு. அனுமாரோடு ஒன்றிப் போனான்.
" சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல் " - என்ற வள்ளுவரின் வாக்கின்படி, ஒரு
கலைஞன் இன்னொரு கலைஞனை உருவாக்க முடியும் என்பதை ‘பாய்ச்சல்’ கதையில் வரும்
அனுமார் கலைஞன் மூலம் அறியமுடிகிறது
No comments:
Post a Comment