Thursday, 6 August 2020

அன்றாட வாழ்வில் அறிவியல் ( கட்டுரை )

 அன்றாட வாழ்வில் அறிவியல்


குறிப்புச்சட்டம்

1.முன்னுரை
2.வாழ்வை எளிதாக்கிய அறிவியல்
3.வேளாண்மையில் அறிவியலின் அற்புதங்கள்
4.அறிவியலால் உள்ளங்கையில் உலகம்
5.உயிரைக் காக்கும் அறிவியல்
6.விண்வெளியில் அறிவியல்
7.முடிவுரை

முன்னுரை

         அறிவியல் இல்லாமல் வாழ முடியாது என்ற நிலைக்கு இன்று மக்கள் வந்துவிட்டனர். அன்றாட வாழ்வில் அறிவியல் நிகழ்த்தும் அற்புதங்களைக் காண்போம்.

வாழ்வை எளிதாக்கிய அறிவியல்

        அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் முன்னோடி எடிசன் கண்டுபிடித்த மின்சாரமாகும். விறகு எருவட்டி கரி ஆகியவற்றைப் பயன்படுத்தி சமைத்த காலம் மாறிவிட்டது. இன்று மின் அடுப்புகளும் எரிவாயு அடுப்புகளும் அன்றாட வாழ்வில் பயன்படுகின்றன. மின் விசிறி சாறு பிழியும் கருவிகள் மாவாட்டும் இயந்திரம் துணி துவைக்கும் இயந்திரம் முதலியன இன்று மனித வாழ்வை எளிதாக்கிவிட்டன.

வேளாண்மையில் அறிவியலின் அற்புதங்கள்

         ஏரு பூட்டி கவலை கட்டி நீர்ப்பாய்ச்சி கையால் களை எடுத்த காலம் மாறிவிட்டது. இன்று நிலத்தை உழுவதற்கும் நாற்று நடுவதற்கும் களை பறிப்பதற்கும் நீர்ப்பாய்ச்சுவதற்கும் அறுவடை செய்வதற்கும் கருவிகள் வந்துவிட்டன. இவ்வாறு அறிவியல் வேளாண்மைத்துறையில் பல அற்புதங்களை நிகழ்த்தி வருகிறது.

அறிவியலால் உள்ளங்கையில் உலகம்

         பேருந்து தொடர்வண்டி கப்பல் விமானம் முதலியன இன்று மக்கள் பயணத்தை எளிதாக்கி விட்டன. வானொலி தொலைக்காட்சிஇ கணிப்பொறி இணையதளம் என இன்று அறிவியலால் உலகம் உள்ளங்கையில் வந்துள்ளது. 


உயிரைக் காக்கும் அறிவியல்

        இன்று மருத்துவத்துறையில் உடலை அறுக்காமல் லேசர் முறையில் அறுவைச் சிகிச்சைகள் நடைபெறுகின்றன. இதயம் கண்இ மூளை போன்ற மாற்று உறுப்புகள் இன்று பொருத்தப்படுகின்றன. அறிவியல் வளர்ச்சி உயிரைக் காத்து இறப்பின் சராசரியைக் குறைத்துவிட்டது.

விண்வெளியில் அறிவியல்

         இன்று செயற்கைக்கோள்களின் துணையால் நிலத்திலும் நீரிலும் மறைந்துகிடக்கும் நீர் வளம்இ எண்ணெய் வளம் கனிம வளம் முதலியன கண்டு பிடிக்கப்படுகின்றன. இவ்வளங்கள் எல்லாம் அன்றாட வாழ்வில் மனிதனுக்கு உதவுகின்றன.

முடிவுரை

         அறிவியல் இன்றேல் ஆக்கப்பணிகள் இல்லை. அறிவியல் இன்றேல் வாழ்வே இல்லை. அறிவியல்தான் மண்ணையும் விண்ணையும் அளப்பதும் காப்பதுமாகும். அறிவியலை அழிவுப்பாதைக்குக் கொண்டு செல்லாமல் ஆக்கப்பணிகளுக்குக் கொண்டு செல்வதே இளைய சமுதாயத்தின் கடமையாகும்.

No comments:

Post a Comment